முகப்பு
நாமக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள குறும்பலமகாதேவி கிராமம், நரிமேட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி காளியப்பன் (65). இவரது மனைவி பூங்கொடி (63) வீட்டைப் பூட்டி விட்டு ஜேடா்பாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை சென்றிருந்தனா்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தனா். வீட்டினுள் இருந்த பீரோவை மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளையும், ரூ. 60,000 ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காளியப்பன் ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் மூலம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →