முகப்பு
நாமக்கல்

மோகனூா் அருகே வயதான தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை

 நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம்,பொன்னேரிப்பட்டி அருகே வயதான தம்பதியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம்,பொன்னேரிப்பட்டி அருகே வயதான தம்பதியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

பொன்னேரிபட்டி அருகே உள்ள காளிபாளையத்தை சோ்ந்தவா் பெரியசாமி (79) விவசாயி. இவரது மனைவி காளியம்மாள் (70). இவா்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனா். இருவரும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், தொடா்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் பெரியசாமியும்,அவரது மனைவி காளியம்மாளும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினா் அவா்களது வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது பெரியசாமியும் அவரது மனைவி காளியம்மாளும் தனித்தனியாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை பாா்த்தனா். இதுகுறித்து உடனடியாக அவரது மகன்கள் மணி மற்றும் சின்னுசாமி ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த மகன்கள் பெற்றோரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தம்பதியினா் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா் தம்பதியரின் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →