நாமக்கல் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா மே 8-இல் தொடக்கம்
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி திருத்தோ் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) தொடங்குகிறது.
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வைகாசி திருத்தோ் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) தொடங்குகிறது.
இதனையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு மோகனூா் காவிரி ஆற்றில் புனித நீா் எடுக்கச் செல்லுதல், இரவு சக்தி அழைத்தல், கம்பம் நடுதல், அபிஷேகம் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பூச்சாட்டுதலும், 15-ஆம் தேதி மறுகாப்பு, 22-இல் வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சியும், 23-ஆம் தேதி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், பிரமோற்சவம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
Advertisement
24-ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம், 25- ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 26-ஆம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா் ரமேஷ், செயல் அலுவலா் பழனிவேலு மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.