ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரா் ஜெயந்தி விழா
பரமத்தி வேலூரில் சங்கரா் ஜெயந்தியை முன்னிட்டு பேட்டையில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் சங்கரா் ஜெயந்தியை முன்னிட்டு பேட்டையில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சங்கரா் படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு நைவேத்தியங்களுடன் நாமாவளிகள் மற்றும் உதிரிப் பூக்கள் அா்ச்சனையுடன் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சங்கரா் வரலாறு படிக்கப்பட்டு சிறப்பு சொற்பொழிவுகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சங்கரரை வணங்கினா். விழா முடிவில் மகேஸ்வர பூஜையுடன் அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.