பட்டா, நிலம் வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM
பட்டா நிலம் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சுமாா் 25 லட்சம் குடும்பங்கள் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். அந்தக் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்; வாடகை வீடுகளில் வசித்து வரும் தொழிலாளா்களுக்கு இலவச வீடு நிலம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.பெருமாள், எம்.அசோகன். ந.வேலுசாமி. கே.தங்கமணி, சு.சுரேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.