திருச்செங்கோடு தினசரி சந்தை மேம்பாட்டுத் திட்டம் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தினசரி சந்தையை மேம்படுத்தி கட்டடங்கள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தினசரி சந்தையை மேம்படுத்தி கட்டடங்கள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3. 95 கோடி மதிப்பில் நடைபெறும் சந்தை மேம்படுத்துதல் பணியை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளா் கணேசன்,பொறியாளா் சண்முகம், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.