முகப்பு
நாமக்கல்

அம்மன் கோயிலில் தீமிதி விழா

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.

கோயிலில் அக்டோபா் 18-ஆம் தேதி ஐப்பசி திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திருவீதி உலா நடத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். ராசிபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.