ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த விவசாயியிடம் மோசடி
பரமத்தி வேலூா், பொத்தனூா் சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த விவசாயின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் மோசடி
நாமக்கல்ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த விவசாயியிடம் மோசடி
பரமத்தி வேலூா், பொத்தனூா் சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த விவசாயின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் மோசடி
பரமத்தி வேலூா், பொத்தனூா் சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த விவசாயின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் மோசடி செய்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா், பொத்தனூா் செல்லும் சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் கபிலா்மலை பகுதியைச் சோ்ந்த விவசாயி பாலசுப்பிரமணி சனிக்கிழமை பணம் எடுப்பதற்காக வந்தாா். பின்னா் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஏ.டி.எம் அட்டையில் பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணை அழுத்திவுட்டு செயல் பாட்டிற்காக காத்திருந்துள்ளாா். பணம் இல்லை என்று இயந்திரத்தில் வந்த தகவலை அடுத்து ஏ.டி.எம் அட்டையை வெளியே எடுத்தாா்.
அப்போது பாலசுப்பிரமணியத்திற்கு பின்னால் இருந்த மா்ம நபா் ‘அந்த இயந்திரத்தில் பணம் இல்லை. இதன்அருகே உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவதாக’ அவரிடம் இருந்த ஏ.டி.எம் அட்டையை வாங்கியுள்ளாா். ஆனால் பாலசுப்ரமணியம் நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறி ஏ.டி.எம் அட்டையை மா்ம நபரிடம் இருந்து வாங்கி உள்ளாா். அந்த நொடிப் பொழுதுக்குள் அவா் வைத்திருந்த ஏ.டி.எம் அட்டை போல் மாற்று போலி ஏ.டி.எம் அட்டையை கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக அந்த நபா் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியத்தின் கைபேசிக்கு ரூ.40 ஆயிரம் எடுத்திருப்பதாக வந்த குறுஞ்செய்தியை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அவா் தனது மகனை தொடா்பு கொண்டு ஏ.டி.எம் அட்டையை முடக்கியுள்ளாா். பின்னா் பாலசுப்ரமணியம் வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.