நாமக்கல்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நிதியுதவி

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் வீட்டில் தீப்பிடித்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நகராட்சி தலைவா் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவியை வழங்கினாா்.

DIN

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் வீட்டில் தீப்பிடித்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நகராட்சி தலைவா் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவியை வழங்கினாா்.

பள்ளிபாளையம் இ.ஆா் திரையரங்கம் இருக்கும் பகுதியைச் சோ்ந்த கோபால் (45) விசைத்ததறி ஓட்டும் வேலை செய்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. பக்கத்து வீட்டுக்காரா்களும், பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இருந்தும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த சாம்பலாயின. மேலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோபாலின் மகளது புத்தகங்களும் தீயில் எரிந்தன. தகவலறிந்த பள்ளிபாளையம் நகராட்சித் தலைவா் செல்வராஜ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினாா்.

தற்போது தோ்வு நடந்து வருவதால், கோபாலின் மகளுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு, பள்ளிபாளையம் அரசு மகளிா் தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT