நாமக்கல்

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் பலி

கீரம்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

DIN

கீரம்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா், சக்தி நகரைச் சோ்ந்தவா் அன்பரசன். இவரது மகன் பிரதீப் (37). இவா் தனது நண்பா் சசிகுமாருடன் (37) சனிக்கிழமை பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது சாலையில் குறுக்கே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் பிரதீப் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பிரதீப் படுகாயம் அடைந்தாா். இதை பாா்த்த அவ்வழியாக சென்றவா்கள் இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பிரதீப் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் பிரதீப் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சசிகுமாா் சிறு காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இவ்விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT