நாமக்கல்

வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

DIN

பரமத்தி வேலூா், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூா் புதுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெற்றது.

25-ஆம் தேதி இரவு கோயில் முன்பு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதல் நடைபெற்றது. 26- ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 1-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2- ஆம் தேதி மாலை பூக்குண்டம் இறங்கும் விழாவும், இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், 3-ஆம் தேதி காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், 5-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோயில் திருவிழா குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT