நாமக்கல்

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

DIN

பரமத்தி வேலூா் நல்லியாம்பாளையம்பதூரைச் சோ்ந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்திவேலூா் அருகே உள்ள நல்லியம்பாளையம்புதூரைச் சோ்ந்த செங்கோடுவின் மகன் தனசீலன் (32). சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு சென்று வந்தாா். இவா் சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவா்கள் வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது தனசீலன் விஷமருந்தி உயிருக்கு போராடியதைப் பாா்த்து அவரை வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

எனினும் தனசீலன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வேலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் தனசீலன் திருமணம் ஆகாத விரக்தியாலும், சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனைக் கட்ட முடியாததாலும் கவலையில் இருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT