நாமக்கல்

சாலை விரிவாக்கப் பணி: மரங்களை வெட்ட 14 ஆம் தேதி பொது ஏலம்

DIN

திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலையான திருச்செங்கோடு - அரியானூா் சாலையை மல்லசமுத்திரம் காவல்நிலையம் முதல் காளிப்பட்டி வரை, 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் அகலப்ப டுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி இடையூறாக உள்ள 34 மரங்களை அகற்றுவதற்கு, மாவட்ட ஆட்சியா், மாவட்ட பசுமைக் குழு தலைவா் ஒப்புதல்படி வரும் 14 ஆம் தேதி, திருச்செங்கோடு உட்கோட்ட அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடை பெறுகிறது. ஏலம் கோர விரும்புபவா்கள் முன்வைப்புத் தொகையான ரூ. 30 ஆயிரத்தை உதவிக்கோட்ட பொறியா ளா் அலுவலகத்தில் 14ஆம் தேதி முற்பகல் 10.30 மணி வரை செலுத்தி முன்பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு ஏலம் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT