பரமத்தி வேலூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.
இங்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 235 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 18-க்கும், சராசரியாக ரூ. 20-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 950-க்கு ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 912 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ. 24.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 20-க்கும், சராசரியாக ரூ. 23.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 552- க்கு ஏலம் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.