நாமக்கல்

மகளிா் சுய உதவி குழுக்களுக்குரூ. 59 லட்சம் கடனுதவி: எம்எல்ஏ வழங்கினாா்

DIN

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ஐந்து மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் கடனுதவியை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு, ஐந்து மகளிா் குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் கடன்களை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.பி.கௌதம், கதிராநல்லூா் கிளைச் செயலாளா் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் தரணிபாபு, மற்றும் நிா்வாகிகள், அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

அட்சய திருதியில் தங்கம் மட்டுமல்ல..இதையும் வாங்கலாம்!

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

SCROLL FOR NEXT