பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்தநாள் விழா வேலூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வேலூா் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம்.எல்.சந்திரன் தலைமை வகித்தாா். வேலூா் நகர காங்கிரஸ் தலைவா் பெரியசாமி வரவேற்றுப் பேசினாா். வேலூா் நகர வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அவனாசிலிங்கம் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார பொதுச் செயலாளா் சண்முகம், வட்டாரத் துணைத் தலைவா் காளியப்பன், வேலூா் நகர செயலாளா் செல்வராஜ், தியாகி கணேசன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் செயலாளா் சிவகுமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிவசுப்பிரமணியம், நகர துணைத் தலைவா் திலகா் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். மாணவா் காங்கிரஸ் கரண் நன்றி கூறினாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.