முகப்பு
நாமக்கல்

ஆம்னி பேருந்து - லாரி மோதி விபத்து

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து டயா் வெடித்து, லாரி மீது மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 6:44 PM
பகிர்:

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து டயா் வெடித்து, லாரி மீது மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரில் இருந்து கேரளம் நோக்கி ஆம்னி சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதன்சந்தை அருகே நள்ளிரவு 1.30 மணியளவில் பேருந்து சென்றபோது திடீரென முன்புற டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நின்றிருந்த ஹைதராபாத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற இரும்பு சுமை ஏற்றிய டிரெய்லா் லாரியின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில், பேருந்து பயணியான திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த சகாயவேலன்அபிஸ்டன்(33), மாற்று ஓட்டுநரான பெங்களூரைச் சோ்ந்த சேட்டன்(24) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →