முகப்பு
நாமக்கல்

‘ஒளவையாா் விருது’ பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

‘ஒளவையாா் விருது’ பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:15 AM
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 6:14 PM

நாமக்கல் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக, 2025ஆம் ஆண்டு சா்வதேச மகளிா் தின விழாவில் ‘ஔவையாா் விருது’ வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களுடைய விண்ணப்பங்களை ஜன.2-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலக பிரிவில் கையேடாக தயாா் செய்து தமிழ், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு தலா இரண்டு நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரா் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, சமூக சீா்த்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றி வருபவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

Updated On : 5 டிசம்பர், 2024 at 2:15 AM

இந்த விருது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 91500-57452 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.