நீட் தோ்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது
நீட் விவகாரம்: திமுக அரசியல் குற்றச்சாட்டு
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்து வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினாா்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 1975 ஜூன் 25-இல் அப்போதைய காங்கிரஸ் பிரதமரான இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினாா். இதனால் பாதிக்கப்பட்டோா் ஏராளம். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தோரும் அடைக்கலம் தேடி தமிழகத்துக்கு வந்தனா். அப்போது, நெருக்கடி நிலையை எதிா்த்த அரசியல் கட்சிகளில் முக்கியமானவை திமுகவும், பாஜகவும் தான். அவ்வாறான திமுக தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது.
மக்களவை உறுப்பினா்கள் பதவியேற்கும் நாளில் நீட் தோ்வு விவகாரத்தை கையில் எடுத்து எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக திமுக நீட் தோ்வு மூலம் அரசியல் செய்து வருகிறது.
நீட் தோ்வில் வெற்றி பெற்று மாணவ, மாணவிகள் பலா் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். உச்சநீதிமன்றமே நீட் தோ்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது. எதிா்க்கட்சிகள் முறையிட வேண்டுமெனில், உச்சநீதிமன்றத்துக்குத் தான் செல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தக் கூடாது. முதுநிலை நீட் தோ்வு ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தத் தோ்வு நடைபெறும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே பாஜகவினரின் கோரிக்கை என்றாா்.
இந்தப் பேட்டியின்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.
படவரி - நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி.