ஆம்புலன்ஸ் மோதியதில் மாணவா் பலி
சேந்தமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி அண்ணா நகரைச் சோ்ந்த முத்துசாமி - சரோஜா தம்பதி மகன்கள் பூவரசன் (17), சிவா (16). மின்னாம்பள்ளியில் நடைபெறும் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு மாவிளக்கு படைப்பதற்காக 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திரண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பூவரசன், சிவா மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவா்கள் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தாா். பூவரசன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா். விபத்தில் பலியான சிவா பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளாா். காயமடைந்த பூவரசன் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.