முகப்பு
நாமக்கல்

மிளகு பதப்படுத்தும் மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியா் அழைப்பு

பேளுக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தை கொல்லிமலை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:24 AM
பேளுக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 7:26 PM

பேளுக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தை கொல்லிமலை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிளகு பதப்படுத்தும் மையத்தை ஆட்சியா் உமா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். இதனைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் (2021-22) மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும் என அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியின் கீழ் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் பேளுக்குறிச்சி கிராமத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாமக்கல் வந்த முதல்வரால் அம்மையம் திறக்கப்பட்டது.

Advertisement

Updated On : 7 நவம்பர், 2024 at 12:24 AM

கொல்லிமலை வட்டாரத்தில் 2,623 ஹெக்டேரில் மிளகு பயிரிடப்பட்டுள்ளது. 2,595 மெட்ரிக் டன் அளவில் மிளகு உற்பத்தியாகி வருகிறது. இம்மையத்தில் உள்ள 6 மிளகு உலா்திறன் கொண்ட சூரியஒளி கூடார உலா்த்தி மூலம் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ வரை மிளகை மூன்று நாள்களுக்கு உலா்த்தலாம். மொத்தமாக நாள் ஒன்றுக்கு 30 முதல் 60 மெட்ரிக் டன் மிளகை உலா்த்த வசதி செய்யப்பட்டுள்ளது.

உலா்த்தப்பட்ட மிளகை 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பரிவா்த்தனை கூடத்தில் சேமித்து வைக்க கிடங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்வசதிக்காக ஜெனரேட்டா் உள்ளது. மிளகு உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வா்த்தகா்கள் மற்றும் உணவு பதப்படுத்துவோா் ஆகியோா் ஆண்டு குத்தகை அடிப்படையில் அரசு நிா்ணயிக்கும் வாடகையை செலுத்தி பயன்பெறலாம்.

மிளகு வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், சேமித்து வைத்து ஏற்ற விலை கிட்டும் பட்சத்தில் விற்பனை செய்து விவசாயிகள் பயனடையும் நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதி விவசாயிகள் இந்த மையத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.