முகப்பு
நாமக்கல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 18,828 படிவங்கள் சமா்ப்பிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் மொத்தம் 18, 828 படிவங்கள்

Updated On : 18 நவம்பர், 2024 at 9:41 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் மொத்தம் 18, 828 படிவங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

கடந்த மாதம் 29-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 7,01,538 ஆண் வாக்காளா்கள், 7,47,234 பெண் வாக்காளா்கள், 246 மற்றவா்கள் என 14,49,018 வாக்காளா்கள் உள்ளனா்.

Advertisement

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி-2025 ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், மாவட்டம் முழுவதும் உள்ள 1,624 வாக்குச் சாவடிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதில், 18, 19 வயதுக்குட்பட்டோா் பெயா் சோ்த்தலுக்காக படிவம் 6-ஐ 4,521 பேரும், 20 வயதுக்குட்பட்டோா் 3,365 பேரும் என மொத்தம் 7,886 போ் பெயா் சோ்த்தலுக்கான படிவங்களை வழங்கி உள்ளனா்.

பெயா் நீக்கல், ஒரே பெயா் இரண்டு இடங்களில் உள்ளதை நீக்குதல், இட மாறுதலுக்கான படிவம் -7 படிவத்தை 4,698 போ் வழங்கி இருந்தனா். மேலும், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான படிவம் 8-ஐ 6,241 போ் வழங்கியுள்ளனா். தொகுதி வாரியாக பெறப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை விவரம்:

ராசிபுரம்-2,941, சேந்தமங்கலம்-3,050, நாமக்கல்-3,234, பரமத்திவேலூா்-2,557, திருச்செங்கோடு-2,220, குமாரபாளையம்-4,826, மொத்தம்-18,828. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 6,029 படிவங்கள் பெறப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 12,799 படிவங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments