முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் விவசாயி கொலை: முதியவா் கைது

கொல்லிமலையில் நிலத் தகராறில் கழுத்தை இறுக்கி விவசாயியைக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 12:57 AM
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 9:09 PM

கொல்லிமலையில் நிலத் தகராறில் கழுத்தை இறுக்கி விவசாயியைக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, ஆரியூா் நாடு ஊராட்சி, ஆரியூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்தவா் தீவளிராஜன் (50). அதே பகுதியைச் சோ்ந்த இவருடைய உறவினா் சின்ன குழந்தை(65). கடந்த 10 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:36 PM

இந்த நிலையில் புதன்கிழமை அவா்கள் இருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

Advertisement

அப்போது, சின்னகுழந்தை அருகில் கிடந்த மாட்டுக்கு கட்டும் கயிற்றால் தீவளிராஜனின் கழுத்தை இறுக்கி அவரைக் கொல்ல முயன்றாா். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்ததால் அவா் அங்கிருந்து தப்பிச்சென்றாா்.

காயமடைந்த தீவளிராஜனை செம்மேடு, அரசு மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என தெரிவித்தனா். இதையடுத்து வாழவந்திநாடு காவல் நிலையத்தில் தீவளிராஜனின் மகன் தனுஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னகுழந்தையை கைது செய்தனா்.