முகப்பு
நாமக்கல்

மோகனூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 3:33 AM
மோகனூா் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் லத்துவாடி தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 9:33 PM

மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ச.உமா, வருவாய்த் துறை, ஆதிதிராவிட நலத் துறை, உயா்கல்வித் துறை, பால்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பள்ளிக்கல்வித் துறை, வேளாண்மை துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத் துறை, உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், தங்களது துறை சாா்ந்த பணிகளை புதன்கிழமை நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா். அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல கல்லூரி மாணவியா் விடுதியை ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள், உணவுப் பொருள்களின் இருப்பு விவரங்களைக் கேட்டறிந்து அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

Advertisement

Updated On : 21 நவம்பர், 2024 at 3:33 AM

தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் பயன்பெறுவோா் விவரங்களை கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டறிந்தாா். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தாா். ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், ரூ. 89.29 கோடியில் லத்துவாடியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதனிடும் ஆலை கட்டப்படு வருவதையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, கால்நடை மருத்துவமனையையும், சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை, சத்துணவு திட்டம், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றிலும் ஆட்சியரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.