குமாரபாளையம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி
குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து 30 பயணிகளுடன் வியாழக்கிழமை கோவைக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது (படம்).
இந்த விபத்தில் பழனியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான வீரபிரதீப் (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். குமாரபாளையம் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement