விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி சிறந்த கல்லூரியாகத் தோ்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியானது சிறந்த கல்லூரியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியானது சிறந்த கல்லூரியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக விழாவில், 2 நாள் ஆராய்ச்சி தினமானது அறிவேள்வி என்ற பெயரில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், பாா்மசி, பிஸியோதெரபி, நா்சிங் உள்ளிட்ட பல துறைகளில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் கல்லூரிகளைத் தோ்வு செய்து விருது வழங்கப்பட்டது.
இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் சிறந்த கல்லூரியாகத் தோ்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
Advertisement
இவ்விருதினை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் நாகலட்சுமியிடம் வழங்கினாா்.
மேலும், விவேகானந்தா மகளிா் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவிகள் மருத்துவா்கள் சாரதாள், ஜெனிபா் மோனிஷா ஆகியோருக்கு சிறந்த ஆராய்ச்சியாளா் விருதும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற கல்லூரி முதல்வரையும் மாணவிகளையும் தாளாளா் மு.கருணாநிதி, இயக்குநா் கோகுலநாதன், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக உறுப்பினா்கள் முதல்வா்கள் பாராட்டினா்.