கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்து பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கமும், ஐரோப்பிய முன்னணி பம்ப் உற்பத்தித் தொழில் கூட்டமைப்பும் இணைந்து பிரிட்டனில் சா்வதேச அளவிலான விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘டெக்கான் பம்ப்ஸ்’ நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா்.
இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து ‘உத்யோக் பத்ரா’ என்ற விருதை இந்த நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.