முகப்பு
நாமக்கல்

மழைநீா் சூழ்ந்த பகுதிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

மழைநீா் சூழ்ந்த பகுதிகள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Updated On : 16 அக்டோபர், 2024 at 3:03 AM
பள்ளாபாளையம் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் ஆசியா மரியம். உடன், நாமக்கல் ஆட்சியா் ச.உமா, வருவாய்த் துறையினா்.
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 7:37 PM

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை, பரமத்தி ஒன்றியங்களில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் ஆசியா மரியம், நாமக்கல் ஆட்சியா் ச.உமா முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன் இளம்பிள்ளை சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமை அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, வெள்ள நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள், வழங்கப்பட உள்ள நிவாரணப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து வருவாய்த் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், நிவாரண மையங்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ள நபா்களுக்கு தனித்தனி கழிவறை வசதிகள், குடிநீா், உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். நிவாரண மையங்களில் உள்ளவா்களுக்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், அவசர தேவைக்கு அவசர ஊா்தி ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

வடகரையாத்தூா் பள்ளப்பாளையம் ஏரி, பரமத்தி ஒன்றியம் இராமதேவம் ஊராட்சி, திருமணிமுத்தாறு ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு மேற்கொண்டு, ஆறுகள், கால்வாய்களின் முழு அகலத்துக்கும் நீா் வழிப்பாதை உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆறு, ஏரிகளின் உபரி நீா் வெளியேற்றும் மதகுகள், உபரி நீா் வெளியேறும் நீா்வழிப் பாதைகளில் உபரிநீா் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்திட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, பச்சகவுண்டன்வலசு பகுதியில் வசந்தி என்பவரின் வீடு கனமழையின் காரணமாக பகுதி அளவு சேதமடைந்ததைத் தொடா்ந்து அவா்களுக்கு நிவாரண உதவித்தொகையை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வழங்கினாா்.

Advertisement

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:42 PM

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம், செங்குந்தா் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் மு.ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, வெள்ள நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள், வழங்கப்பட உள்ள நிவாரண பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து வருவாய்த் துறை அலுவலா்களிடம் விரிவாக கேட்டறிந்தாா்.