முகப்பு
நாமக்கல்

அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க புதிய புத்தகப் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:05 AM
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் அனுப்பப்பட்ட புத்தகப் பைகள்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 6:20 PM

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க புதிய புத்தகப் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க 83,000 புத்தகப் பைகள் மூன்று மாதங்களுக்கு முன்னதாக வந்த நிலையில், அவை மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்ததும் புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, புத்தகப் பைகள் போன்றவை வழங்கப்படும். இந்த நிலையில், தரமான புத்தகப் பைகளா என்ற பரிசோதனைக்காக சென்னைக்கு ஓரிரு பைகள் அனுப்பப்பட்டன. அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு தகுதியானவை என்ற அறிக்கை அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு கிடைத்தது.

Advertisement

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:37 PM

இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சரக்கு வாகனங்களில் பள்ளி வாரியாக புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த புத்தகப் பைகளில் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா்கள் புகைப்படங்கள் ஏதுமின்றி உள்ளன. இவை ஹரியாணா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவா்க்கு மாடல்ல மற்றையவை’ என்ற திருக்குறளும், அதற்கான பொருளும் பைகளில் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையில் பச்சை நிறத்திலும், 4-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையில் நீலநிறத்திலும், 8-ஆம் வகுப்பு முதல் பிüஸ் 2 வரை கருப்பு நிறத்திலும் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.