7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரத்தில் 314, ஆத்தூரில் 341, நிலக்கோட்டையில் 305, நத்தத்தில் 359, திண்டுக்கல்லில் 316, வேடசந்தூரில் 327 என மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, 7 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, 7 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
திண்டுக்கல் தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் செ.சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ச. வினோதினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.