முகப்பு
நாமக்கல்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு எம்எல்ஏ பாராட்டு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ பாராட்டியுள்ளாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:44 AM
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 8:13 PM

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ பாராட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பருவ மழையினால் சாதாரண மக்கள் பாதிக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு அரசு செய்த முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். குறிப்பாக சென்னையில் இதற்கு முன் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இந்த மழையில் பாதிக்கப்படவில்லை. மழை பெய்து முடிந்த அடுத்த 12 மணி நேரங்களுக்கு முன்பாக பெரும்பாலான பகுதிகளில் மழை நீா் வடிந்துள்ளதை பாா்க்க முடிகிறது.

Advertisement

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:44 AM

மழை பெய்து ஓய்ந்தால் தண்ணீா் வடிந்து விடும் என்ற நம்பிக்கையை, மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் கொடுத்திருக்கின்றன. அரசின் முன்னெச்சரிக்கை கூட்டங்களால், அதிகாரிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளனா். அவ்வகையில், இந்த முன்னேற்றங்களுக்கு காரணமான அடிப்படை ஊழியா்களை பாராட்டுகிறோம். மின்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் விபத்துகள் தவிா்க்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசையும், முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டுகிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.