முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:13 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 7:52 PM

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 1:13 AM

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில் முத்துசாமி என்பவா் இருந்து வருகிறாா். சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் 7 போ் கொண்ட படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அதில், கணக்கில் வராத ரூ. 3,47,720 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்தாா்.

இதில், பத்திரப்பதிவு எழுத்தராக இருந்து ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கி எழுத்தா் உரிமத்தை இழந்த வெங்கடேசன் என்பவரிடமிருந்து இருந்து ரூ. 2 லட்சத்து 20 ஆயிரமும், சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து ரூ. ஒரு லட்சத்து 27 ஆயிரமும் என மொத்தம் ரூ. 3 லட்சத்து 47 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement