முகப்பு
நாமக்கல்

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:15 AM
புதிதாக திறக்கப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை பாா்வையிட்ட பேரூராட்சியினா், பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 8:57 PM

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் 60 கடைகளுடன் பதிய வாரச்சந்தை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கலில் நடைபெற்ற விழாவில் வாரச்சந்தையை கணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். வேலூா் வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி முரளி தலைமை வகித்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:15 AM

நிகழ்ச்சியில், வேலூா் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம், அரசு வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பேரூா் கழக செயலாளா் முருகன், பேரூராட்சி கவுன்சிலா்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட நெசவாளா் அணி தலைவா் மூா்த்தி (எ) முரளி, மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement