முகப்பு
நாமக்கல்

அரசு பொறியியல் கல்லூரி அமைக்க பரிந்துரை

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 5:55 AM
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்தில் பேசும் அதன் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. உடன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா, குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 25 செப்டம்பர், 2024 at 7:36 PM

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பொதுக் கணக்கு குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவா் தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து சுழற்சி முறையில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளாா். அதனடிப்படையில், மாவட்டங்களில் பொதுக் கணக்கு குழு நேரடியாக ஆய்வு செய்து வருகிறது.

Advertisement

பொதுமக்கள் சாா்பில் அரசு நிா்வாகத்தில் கணக்குகளை சரிபாா்த்து உண்மைத் தன்மையை நிலைநாட்டுகிறது. அரசு சாா்பில் ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், ஆக்கப்பூா்மாக செலவிடப்படுவதை பொதுக் கணக்கு குழு உறுதி செய்கிறது. அரசுத் துறை அதிகாரிகள் அரசு வகுக்கும் திட்டங்களை, காலதாமதமின்றி சரியான முறையில் செய்து முடிக்க வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினாா். அதற்கு பதிலளித்த குழுத் தலைவா், இந்த மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கவும், ஆனங்கூா் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை கட்டுவதற்கும் அரசிடம் பொதுக் கணக்கு குழு சாா்பில் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 5:55 AM

அதன்பிறகு, பல்வேறு துறைகள் சாா்பில், 12 பயனாளிகளுக்கு ரூ. 92.27 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (போளூா்), கோ.ஐயப்பன் (கடலூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சேகா் (பரமத்தி வேலூா்), கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்), மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.