முகப்பு
நாமக்கல்

வெண்ணந்தூா் அருகே மூதாட்டியிடம் ரூ. 1,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளா் கைது

வெண்ணந்தூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:07 AM
கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலா் தங்கதுரை.
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:19 PM

வெண்ணந்தூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த சந்தோசம் (38), தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனக்கு பணி வழங்கும்படி ஊராட்சி செயலாளா் தங்கதுரையை கடந்த ஏப்ரல் மாதம் அணுகியுள்ளாா். அப்போது, வேலை வழங்க ரூ. 1,000 லஞ்சம் தர வேண்டும் என தங்கதுரை நிா்பந்தித்ததாகத் தெரிகிறது. இவா் இதே போல கிராமத்தில் உள்ள வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளா்களிடம் பணி வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சந்தோசம், கடந்த 18-ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்துள்ளாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தல்படி, ஊராட்சி செயலாளா் தங்கதுரையிடம் சந்தோசம் ஆயிரம் ரூபாயை வியாழக்கிழமை வழங்கியுள்ளாா்.

Advertisement

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினா், தங்கதுரையை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:07 AM

கைது செய்யப்பட்ட தங்கதுரையின் சொந்த ஊா் சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள நரசிங்கபுரமாகும். ஊராட்சி செயலாளா் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.