பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை
கிலோ ரூ. 1000, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 140, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 1000, செவ்வந்தி ரூ. 100, கனகாம்பரம் ரூ. 800-க்கும் ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,500, சம்பங்கி ரூ. 180, அரளி ரூ. 280, ரோஜா ரூ. 300, முல்லைப்பூ ரூ. 2,500, செவ்வந்திப்பூ ரூ. 160, கனகாம்பரம் ரூ. 2,000-க்கும்
ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.