மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.  
நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 476 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிநீா், சாலை வசதி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு போன்றவை கோரி பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 476 மனுக்கள் அளிக்கப்பட்டன.

அவற்றைப் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரைத்தாா். அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 93,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். மேலும், பொதுமக்களுக்கு எழுதி தரும் தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT