நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் 35 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Syndication

நாமக்கல் அரங்கநாதா் கோயில் வளாகத்தில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள குடைவறை கோயிலான அரங்கநாதா், ரங்கநாயகி தாயாா் கோயிலில் 35 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை தொழிலதிபரும், அதிமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளருமான ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக, மருத்துவா் சந்திரா, ஆடிட்டா் ஜெ.வெங்கடசுப்பிரமணி, ஆன்மிக இந்து சமயப் பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், கே.ஜவஹா், பாண்டியன், கமால்பாஷா, சின்னுசாமி, எஸ்.கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், கா்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள், ஜவுளி வகைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து சமயப் பேரவை செயலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT