முகப்பு
நாமக்கல்

மகளிா் நலனுக்கான திட்டங்களை விளக்கி திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்

மகளிா் நலனுக்காக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களை விளக்கி திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:45 AM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:12 PM

மகளிா் நலனுக்காக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களை விளக்கி திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணி ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில மகளிா் தொண்டா் அணி இணைச் செயலாளா் ராணி வரவேற்றாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

திமுக தலைமை உத்தரவின் பேரில், வாக்குச் சாவடிகளில் பாக முகவா்களாக மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணியைச் சோ்ந்தோா் நியமிக்கப்பட உள்ளனா். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.

Advertisement

தமிழக முதல்வா் சில மாதங்களுக்கு முன் நாமக்கல் வருகை புரிந்து பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி சென்றாா். இன்னும் ஓரிரு மாதங்களில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வருகை தர இருக்கிறாா். அதில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய பேருந்துகள் விடப்பட்டு வருகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:45 AM

மகளிா் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வா் செயல்படுத்தி வரும் 6 திட்டங்களான காலை உணவுத் திட்டம், மகளிா் விடியல் பயணத் திட்டம், 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி, மகளிா் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமைப்பெண் திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று பெண்களிடையே திமுக மகளிா் அணியினா் திண்ணைப் பிரசாரம் வாயிலாக விளக்கிக் கூற வேண்டும். மேலும், திமுக அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகள் குறித்தும், அதனால் மக்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஜோதி, ஒன்றிய, நகரச் செயலாளா்கள், மகளிா் அணி, தொண்டா் அணியைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.