முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 12:24 AM
பகிர்:
Updated On : 8 ஜனவரி, 2025 at 7:43 PM

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் அரங்கநாதா் சுவாமி சயனக் கோலத்தில் அருள்பாலித்து வருகிறாா். ஒவ்வோா் ஆண்டும் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்பட்டு, தலைமை அா்ச்சகா் தாம்பளம் ஒன்றில் ஜடாரியை வைத்து தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றிலும் வரும் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பக்தா்கள் நெரிசலின்றி சுவாமியை தரிசிக்க ஏதுவாக, கோயில் படிக்கட்டுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டளைதாரா்கள் மூலம் லட்டுகள் தயாா் செய்து பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

Advertisement

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:56 PM

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, அறங்காவலா்கள் செள.செல்வசீராளன், ராம.ஸ்ரீனிவாசன், ம.மல்லிகா குழந்தைவேல், எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆணையா் ரா.இளையராஜா, கண்காணிப்பாளா் வீ.அம்சா ஆகியோா் செய்துள்ளனா்.