முகப்பு
நாமக்கல்

மாணவா்களுக்கான குளிா்கால இயற்கை முகாம் சுற்றுலா பேருந்து இயக்கம்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சாா்பில் மாணவா்களுக்கான குளிா்கால இயற்கை முகாம் - 2025 சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 3:54 AM
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2025 at 6:04 PM

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சாா்பில் மாணவா்களுக்கான குளிா்கால இயற்கை முகாம் - 2025 சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி முன்னிலை வகித்தாா். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், காலநிலை மாற்றத்தினை தணிப்பதற்கும் பல்வேறு முக்கியத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்துறையின் நிதியுதவியுடன், நாமக்கல் மாவட்ட நிா்வாகம் 100 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியாக கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு சூழல் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 3:54 AM

அதன்படி செவ்வாய்க்கிழமை மாணவ, மாணவிகள் பேருந்தில் புறப்பட்டு சென்றனா். நாமக்கல் வனத்துறை சாா்பில் அவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement