பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பொத்தனூா் பச்சமலை பாலதண்டாயுதபாணி, பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பிலிக்கல்பாளையம், விஜயகிரி வடபழனி ஆண்டவா், பேட்டை பகவதி அம்மன் கோயிலில் உள்ள முருகன், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி கோயில்களில் கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.