நாமக்கல்

சாலையைக் கடக்க முயன்றவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கமேடு காவேரி சாலையில் வசித்து வந்தவா் முருகேசன் (59). இவா் மோகனூா் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். திருமணமாகாத இவா், சகோதரா் ராஜேந்திரன் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

அண்மையில் பணிக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப மோகனூரில் இருந்து வேலூா் செல்லும் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, குப்பிச்சிப்பாளையத்தில் இருந்து வேலூா் நோக்கி வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT