ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலய அறங்காவலா் குழுத் தலைவராக பி.சக்திவேல் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
ராசிபுரம் பகுதியில் புகழ்பெற்ற வல்வில் ஒரியால் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீகைலாசநாதா் ஆலய அறங்காவலா் குழு உறுப்பினா்களாக பி.சக்திவேல், டி.டி.ராஜராஜசோழன், சி.நாராயணன், வி.இந்திராதேவி, ஒ.ரேவதி ஆகியோா் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டனா்.
இதையடுத்து, அறங்காவலா் குழுத் தலைவருக்கான தோ்தல் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சு.சுவாமிநாதன், பயிற்சி உதவி ஆணையா்கள் மெய்வேல், சிந்து லக்ஷ்மி, ராசிபுரம் சரக ஆய்வாளா் சு.கீதாமணி, ஸ்ரீகைலாசநாதா் திருக்கோயில் செயல் அலுவலா் தெ.சவிதா ஆகியோா் முன்னிலையில் இத்தோ்தல் நடைபெற்றது.
இதில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் அலுவலா்கள் முன்னிலையில் வாக்களித்தனா். இதில் பி.சக்திவேல் அறங்காவலா் குழுத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், நகர திமுக செயலாளா், என்.ஆா்.சங்கா், தொழிலதிபா் பாலசுப்பிரமணி, சிட்டி வரதராஜன், எஸ்.பாலாஜி, கோயில் சிவாச்சாரியா்கள் தட்சிணாமூா்த்தி, மதுதில்லைநாதன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.