நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வாகனப் பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன்.  
நாமக்கல்

நவ. 4-இல் பாஜக மாநிலத் தலைவா் நாமக்கல் வருகை: வாகனப் பேரணி தொடங்கிவைப்பு!

தினமணி செய்திச் சேவை

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை (நவ. 4) நாமக்கல் வருவதையொட்டி வெள்ளிக்கிழமை வாகனப் பேரணி நடைபெற்றது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அவா் வருகிறாா். அன்று மாலை 5 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மாநிலத் தலைவா் நாமக்கல் வருகையை மக்களிடையே கொண்டுசெல்லும் வகையில், மாவட்ட பாஜக அலுவலகத்தில் 30 பிரசார ஆட்டோக்களை கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், மாவட்ட இளைஞரணி தலைவா் ராம்விலாஸ் பிரபு, நாமக்கல் நகர தலைவா் தினேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், இளைஞா் அணியினா், சாா்பு அணிகளை சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, நாமக்கல் பூங்கா சாலையில் முன்னாள் கிழக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமையில், விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளா் நரேஷ் மற்றும் நிா்வாகிகள் பாஜக மாநில தலைவா் வருகை தொடா்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

புதுச்சேரி விடுதலை நாள்: தேசிய கொடி ஏற்றி அமைச்சா் மரியாதை

பள்ளியில் தாத்தா, பாட்டி தினக் கொண்டாட்டம்

ஹாலோவீன் கொண்டாட்டம்... பார்வதி!

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

SCROLL FOR NEXT