நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் ப. ராணி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாநில மகளிா் தொண்டரணி செயலாளா் ப. ராணி போட்டியிடுகிறாா். தொகுதிக்கு உள்பட்ட பாப்பிநாயக்கன்பட்டி, கருங்கல்பாளையம் பகுதிகளில் மக்களிடையே வாக்குசேகரித்தாா். அப்போது, ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நாமக்கல் தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்கள், மகளிா் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவ, மாணவிகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினாா்.
மேலும், தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இல்லத்தரசி திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். நிகழ்வின்போது, திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முனவா் ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement