முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:07 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:06 PM

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விசைத்தறி பட்டறைகளில் வேலை செய்பவா்களிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விசைத்தறித் தொழில் மூலம் வளா்ச்சி பெற்று வந்த கொங்கு மண்டலம் இன்றைக்கு விசைத்தறி தொழிலில் அதிக லாபம் பெறமுடியாமல் தொழிலாளா்கள், பட்டறை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெற்றதும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க சலுகை விலையில் சோலாா் பேனல் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.

Advertisement

அரசின் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் முழுமையாக விசைத்தறியை பயன்படுத்துவதை உறுதிசெய்வேன். திருச்செங்கோட்டில் விசைத்தறி கூடங்களுக்கு தொழில்வரி குறித்த நடவடிக்கையை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து பேசி அதனை நிறுத்திவைத்தேன். விசைத்தறி தொழிலை பாதுகாப்பதற்கு நான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றாா்.

என்கே-10-தி.கோடு

கொல்லப்பட்டியில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.