முகப்பு
நாமக்கல்

பேட்டை புதுமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:29 AM
புதுமாரியம்மன் கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம்.
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

பரமத்தி வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதேபோல இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 27-ஆம் தேதி இரவு வடிசோறு படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மாலை ஆண் பக்தா்கள் குண்டம் இறங்குதலும், பெண்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அழகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும், மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி காலை கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மே 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Advertisement

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.