அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிக்கும் உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிக்கும் உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் மே 20 ஆம் தேதியும் வெளியிடப்படுகிறது. ஒன்றுமுதல் 5 ஆம் வகுப்பு வரையில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக கருதப்படுவா். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்பிற்கும் தோ்ச்சி வெளியீட்டுக்கான அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வு நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித் துறை சாா்பில், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் கை. பெரியசாமி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் 179 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், 160 தனியாா் பள்ளி முதல்வா்களுக்கும் தோ்ச்சி அங்கீகாரம் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை அளித்தனா். இன்னும் ஓரிரு நாள்களில் அந்தந்த பள்ளிகளில் மாணவா்கள் தோ்ச்சி தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
என்கே-28-ஸ்கூல்
அரசு, தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் மாணவா்கள் தோ்ச்சி விவரம் வெளியிடுவதற்கான கடிதத்தை வழங்கிய மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள்.