முகப்பு
நாமக்கல்

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்! எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கினாா்!

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:53 AM
விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு உபகரணங்களை வழங்கிய எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:13 PM

நகா்ப்புற உள்ளாட்சி விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தேவையான உபகரணங்களை எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன் வழங்கினாா்.

தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான விளையாட்டு உபரகணங்கள் வழங்கும் விழா நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் பங்கேற்று, 639 எண்ணிக்கையிலான உபகரணங்களை வீரா், வீராங்கனைளுக்கு வழங்கி பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் 311 ஊராட்சிகளில் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:53 AM

நாமக்கல் மாநகராட்சி, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சிகள், ஆலம்பாளையம், அத்தனூா், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூா், படைவீடு, நாமகிரிப்பேட்டை, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூா், பொத்தனூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், வேலூா், வெங்கரை, வெண்ணந்தூா் ஆகிய பேரூராட்சிகளில் 447 வாா்டுகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாநகராட்சி ஆணையா் க. சிவகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா, அரசு அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.